எம்மைப்பற்றி
இவ் இணையம் 2003ம் ஆண்டில் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இராஜகோபுர திருப்பணி ஆரம்பித்த போது உருவாக்கப்பட்டது. நாங்கள் பிறந்து நடைபயின்று வாழ்ந்த கிராமத்தின் பெயரும், அதன் நினைவுகளும் அனைவர் மனங்களில் இருந்தும் அகன்றோ அன்றி மறைக்கப்பட்டோ விடக்கூடாது என்பதற்காகவும், தாயகத்திலும், புலத்திலும் இருக்கும் மக்களை இணைக்கும் தளமாக இவ் இணையம் செயப்பட்டு கொண்டிருக்கிறது. அத்துடன் இவ் இணையத்தில் கிராமம் தொடர்பான புகைப்படங்கள், கிராமத்தின் ஆலயங்கள், பாடசாலைகள், தாயகத்திலும், புலத்திலும் உள்ள எம்மவர் நிகழ்வுகள், மரண அறிவித்தல்கள் போன்ற விபரங்களுடன் மேலும் பல பயன்தரு தகவல்களும் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் எமக்கு கிராமம் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் போது இவ்இணையத்தின் ஊடாக வெளிக்கொணர்வதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். |